தினத்தந்தி | Dina Thanthi தினகரன் | Dinakaran
தின பூமி | Thinaboomi தமிழ் முரசு | Tamil Murasu
தமிழ் கூகிள் செய்தி | Google news in Tamil ஒன் இந்தியா தமிழ் | OneIndia Tamil
தமிழ் 24 செய்தி | Tamil 24 News லோட்டஸ் செய்திகள் | Lotus News
தமிழ் சி என் என் | Tamil CNN தமிழ் சிகரம் | Tamilsigaram.com
பாரிஸ் தமிழ் | Paris Tamil தமிழ் முரசு – சிங்கப்பூர் | Tamil Murasu - Singapore
வணக்கம் லண்டன் | Vanakkam London தினசுடர் | Dinasudar
வீர கேசரி | Virakesari பிபிசி தமிழ் | BBC News Tamil
ஏ டு செட் தமிழ் | A2Z Tamil Nadu தி இந்து தமிழ் | The Hindu in Tamil
தூது ஆன்லைன் | thoothuonline.com சீன வானொலி | China Radio Tamil
விடுதலை | Viduthalai மாலை மலர் | Maalai Malar
தின மலர் | Dinamalar தமிழ் கார்டியன் | Tamil Guardian
தீக்கதிர் | Theekkathir தின மணி | Dina Mani
வெப் துனியா தமிழ் | Webdunia Tamil கூடல் டாட் காம் | Koodal.Com
தமிழ் ஸ்டார் | Tamil Star தமிழ் டாட் காம் | Tamil.com
என் தமிழ் | NTamil.com செய்தி டாட் காம் | Seithy.com


[right-side]


உலகின் மிகப்பெரிய தொங்குபாலம் மெக்ஸிக்கோவில்

உலகின் மிகப்பெரிய தொங்கு பாலம் மெக்ஸிக்கோவில் உள்ளது.

1000 மீற்றர் நீளமானதும் 400 மீற்றருக்கும் அதிகமான உயரம் கொண்டதுமான இப்பாலம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துக் கொண்டது. பாலத்தின் மையப் பரப்பு பாரிஸிலுள்ள ஈபிள் கோபுரத்தின் பரப்புடன் பொருந்துகிறது.

பல மில்லியன் பவுண்ஸ் செலவில் உருவான இந்த பாலம் மெக்ஸிக்கோவின் சியரா மத்ரே ஒக்ஸிடென்டல் மலையின் ஆழமான இடுக்குகளின் வழியாக ஊடறுத்துச் செல்கிறது. இதை உருவாக்க 4 ஆண்டுகள் ஆயிற்று.

1810ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிடமிருந்து மெக்ஸிக்கோ சுதந்திரம் பெற்று இருநூறு ஆண்டுகளைக் குறிக்கும் நினைவுச் சின்னமாக இப்பாலம் கட்டப்பட்டுள்ளது.




உலகின் மிகப்பெரிய தொங்குபாலம் மெக்ஸிக்கோவில்


உலகின் மிகப்பெரிய தொங்குபாலம் மெக்ஸிக்கோவில்


இன்று இரவு முழுவதும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு அருகே 170 கி.மீ தொலைவில் உள்ளது, அது வட தமிழகம் மற்றும் தென் ஆந்திரா கடற்கரை பகுதிகளில் தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் இரவு முழுவதும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
 
மேலும், இன்று வந்தவாசியில் 5 செ.மீ, திருவள்ளூரில் 4 செ.மீ அளவிற்கு மழை பெய்துள்ளதாகவும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Beautiful Lips



உதடுகள் அழகு பெற குறிப்புகள்



  • பீட்ரூட்டை வெட்டி அதன் சற்றை உதடுகளில் பூசிவர உதடுகள் சிகப்பழகு பெறும்.
  • சந்தனத்தை பன்னீரில் கலந்து பூசலாம்.
  • ரோஜா இதழ்களை நசுக்கி சாற்றை எடுத்து பூசிவர உதடுகள் சிகப்பாக மாறும்.
  • ரோஜா இதழ்களை பால் விட்டு அரைத்து பூசிவந்தால் உதட்டு வெடிப்புகள் மாறும்.

 
Tamil National Liberation Struggle and National Leader Prabhakaran
மே17 - 2009 - தமிழினப் படுகொலை நாள். வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இலங்கை அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டனர். நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது.

ஈழப் போர் அல்லது இலங்கை உள்நாட்டுப் போர் என்பது இலங்கை இனப்பிரச்சினை காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும், போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது. இப்போரானது சிங்களவருக்கும், தமிழருக்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பாக நிலவிவரும் பாரிய கருத்து முரண்பாடுகளின் மூலத்தைக் கொண்டதாகும். 23 யூலை 1983 முதல் 26 ஆண்டுகள் நடைபெற்ற இப்போர் 2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.

27 வருடங்களுக்கு மேலாக இப் போராட்டம் இலங்கை மக்களுக்கு கடும் துன்பத்தையும், சூழல், பொருளாதார ரீதியாக நாட்டிற்கு இழப்பையும் ஏற்படுத்தி 80,000–100,000 க்கு மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் காரணமாகியது. போரின் ஆரம்ப காலத்தில் இலங்கைப் படைகள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீளவும் கைப்பற்ற முனைந்தனர். அரசுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட உத்திகள் தடையாக இருந்தாலும், புலிகளை அமெரிக்கா, இந்தியா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட் 32 நாடுகள் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டனர்.[15] இலங்கை அரச படைகள் திட்டமிட்ட மோசமான மனித உரிமை மீறல், பலவந்தமாக காணாமல் போதல், நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள் என்பவற்றுக்காக குற்றம் சாட்டப்பட்டனர்.

இரு தசாப்தங்களாக போர் மற்றும் தோல்வியுற்ற நான்கு சமாதானப் பேச்சு வார்த்தைகள், மற்றும் 1987 - 1990 காலப்பகுதியில் இலங்கையில் நிலை கொண்ட இந்தியப் படைகளின் தோல்வியில் முடிந்த பிரசன்னம் என்பவற்றின் பின் மார்கழி 2001 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டு, சர்வதேச மத்தியஸ்துடன் போர் நிறுத்தம் 2002 இல் மேற்கொள்ளப்பட்டது. ஆயினும், 2005 பிற்பகுதியில் முரண்பாடு ஆரம்பமாகி, பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யூலை 2006 இல் அரசு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் புலிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேற வேண்டி ஏற்பட்டது. 
 
Tiger Movement Liberation Tigers of Tamil Eelam
 

2007 இல் அரசாங்கம் தாக்குதலை வடபகுதிக்கு மாற்றி, 10,000 க்கு மேற்பட்ட தடவைகள் புலிகள் யுத்த நிறுத்தத்தை மீறியதாக குற்றச்சாட்டி ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. இதன் மூலம் புலிகளின் தங்கள் தலைமைச் செயற்பாட்டிடமாக கொண்டிருந்த கிளிநொச்சி, பிரதான இராணுவ மையமாக இருந்த முல்லைத்தீவு, முழு ஏ9 நெடுஞ்சாலை ஆகிய இடங்களைக் கைப்பற்றி, தமிழீழ விடுதலைப் புலிகள் 17 மே 2009 அன்று தோல்வியுற்றனர். இதன் பின்னர் ஐ.நா.வினால் இலங்கை அரசும் புலிகளும் போர்க் குற்றம் புரிந்ததாக குற்றஞ் சாட்டப்பட்டனர். இதற்கான பதில் கூறலில் விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் இலங்கை அரசு நெருக்கடிகளுக்கு உட்பட்டு வருகின்றது.

ஈழப் போராட்ட காரணங்கள் ,

  • தனிச் சிங்களச் சட்டம்
  • பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
  • இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
  • கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
  • திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
  • அரச பயங்கரவாதம்
  • யாழ் பொது நூலகம் எரிப்பு
  • சிங்களமயமாக்கம்
  • வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு
  • சிங்களப் பேரினவாதம்
  • ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
  • அரச சித்திரவதை
  • பாலியல் வன்முறை
  • இலங்கைத் தமிழர் இனவழிப்பு
  • இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்
  • இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு




poll machine
ஒருசில இடங்களில் நடைபெற்ற சிறிய அளவிலான மோதலை தவிர்த்து பெரும்பான்மையான இடங்களில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. அதிகாலை முதலே வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். அரசியல் பிரமுகங்கள், திரைநட்சத்திரங்கள் என அனைத்து தரப்பினரும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இன்று பதிவான வாக்குகள் வரும் 19ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. பணப் பட்டுவாடா புகார்களை தொடர்ந்து அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 
poll
கேரள சட்டப்பேரவையில் உள்ள 140 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை (மே 16) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கேரள சட்டப்பேரவையில் மொத்தம் 141 இடங்கள் உள்ளன. இதில் ஒரு உறுப்பினர், நியமனம் செய்யப்படுவார். எஞ்சிய 140 இடங்களுக்கும் திங்கள்கிழமை (மே 16) தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், 2.61 கோடி பேர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். 140 தொகுதிகளிலும், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 1,203 பேர் களத்தில் உள்ளனர். அவர்களில் 109 பேர் பெண்கள்.

தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எனத் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியும் தேர்தலில் வெற்றி பெற்று புதிய சரித்திரத்தை படைப்போம் என்ற நம்பிக்கையுடன் உள்ளது. கேரள சட்டப்பேரவைக்கு இம்முறை முதல்முறையாக தனது உறுப்பினரை அனுப்பிவிட வேண்டும் என்ற தீவிரத்துடன் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.

முதல்வர் உம்மன் சாண்டி, உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா (இருவரும் காங்கிரஸ்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வி.எஸ். அச்சுதானந்தன், பினராயி விஜயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும், வர்த்தகத் துறை அமைச்சருமான குஞ்ஞாலிக்குட்டி, முன்னாள் நிதியமைச்சர் கே.எம். மாணி (கேரள காங்கிரஸ்-எம்), பாஜக மாநிலத் தலைவர் கும்மணம் ராஜசேகரன், மத்திய முன்னாள் அமைச்சர் ஓ. ராஜகோபால், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் ஆகியோர் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

The Reusable Launch Vehicle (RLV)

விண்வெளிக்கு சென்று திரும்பும் வகையிலான விண்கலத்தை ஏவி, மீண்டும் ஒரு வரலாற்றை படைக்க காத்திருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு மையம். இதற்கான பணிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அமெரிக்காவை போல விண்வெளிக்கு சென்றுவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் விண்கலங்களை உருவாக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது. இது மறைந்த முன்னாள் ஜனாதிபதியும் ராக்கெட் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் கனவு திட்டமாகும். இதற்காக, மறுபயன்பாட்டு தொழில்நுட்ப ராக்கெட் (ஆர்எல்வி) என்ற விண்கலத்தை உருவாக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அமெரிக்காவை தவிர பிற முன்னணி நாடுகளே இத்திட்டத்தை கைவிட்ட நிலையில், இஸ்ரோ மிக குறைந்த எடையில் இந்த விண்கலத்தை தயாரித்து வருகிறது. சுமார் 15 ஆண்டுக்கு முன்பே இது தொடர்பாக திட்டமிடப்பட்டாலும், 5 ஆண்டுக்கு முன்தான் இதற்கான பணிகள் தொடங்கின. இதற்கான திட்டமதிப்பீடு ரூ.95 கோடி.

இந்த விண்கலம் 6.5 மீ. நீளம் கொண்ட விமானத்தை போலவும், 1.75 டன் எடை கொண்டதாகவும் இருக்கும். தற்போது இதன் இறுதிக்கட்ட பணிகள் ஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் நடந்து வருகிறது. ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இதை விண்ணில் செலுத்தி சோதனை முயற்சிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அமெரிக்கா மட்டுமே 135 முறை விண்கலத்தை செலுத்தி உள்ளது. ரஷ்யா ஒரே ஒருமுறையும், பிரான்ஸ், ஜப்பான் பரிசோதனையுடனும் நின்றுவிட்டன. சீனா இந்த முயற்சியில் இதுவரை இறங்கவில்லை. எனவே, மங்கள்யானை விண்ணில் செலுத்தி சாதித்த இஸ்ரோ, விண்கலத்திலும் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அப்துல் கலாம் நினைவாக ‘கலாம்யான்’ என பெயரிட இஸ்ரோ விஞ்ஞானிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

 
வாரன் பபெட்
பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத் தின் தலைவர் வாரன் பபெட் யாகூ நிறுவனத்தை வாங்கும் முயற்சி யில் இருப்பதாகத் தெரிகிறது. யாகூ நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் இருக்கும் நிறுவனங்களுக்கு வாரன் பபெட் நிதி உதவி செய்ய இருப்பதாக தெரிகிறது.

யாகூ நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே தடுமாறி வருகி றது. அந்த நிறுவனத்தை வாங்க 10-க் கும் மேற்பட்ட நிறுவனங்கள் முயற்சி செய்வதாக ஒரு மாதத்துக்கு முன்பு செய்தி வெளியானதை அடுத்து இப்போது வாரன் பபெட்டும் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இவர் உதவி செய்ய இருக்கும் நிறுவனங்கள் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் உள்ளன. ஆனால் நிச்சயம் வாங்கும் என்ப தற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து யாகூ நிறுவனமோ, வாரன் பபெட்டோ கருத்து தெரிவிக்கவில்லை.

கடந்த மாதம் யாகூவை வாங்க பத்து நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால் அவை அனைத்தும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் ஆகும். கடந்த மாதம் பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யப்படும் என்று கூறினார்.

யாகூ நிறுவனத்தில் 2000 ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை தலைமை நிதி அதிகாரி உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் சுசன் டெகெர், இவர் இப்போது பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் ஒருவராக இருக்கிறார். இவர் தவிர யாகூ நிறுவனத்தின் சில முன்னாள் பணியாளர்கள், இந்த நிதி உதவிக்கு ஆலோசகர்களாக இருப்பதாகவும் தெரிகிறது.



வலைத்தளம் : தி இந்து
வலைப்பக்கம் : http://tamil.thehindu.com

MARI themes

Powered by Blogger.